மெக்கானிக் போக்சோவில் கைது

ஈரோடு, டிச. 12:  ஈரோடு பெரியார் நகர் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் மகன் சாந்தகுமார் (49). பின்னாலாடை இயந்திர மெக்கானிக். ஈரோடு பகுதியை சேர்ந்த 13 வயது பெண் இவரது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சிறுமியிடம் செல்போனில் ஆபாசம் படம் காண்பித்து, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அச்சிறுமியிடம் இது குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் தொடர்ந்து சிறுமியை பின்தொடர்ந்து பல்வேறு தொந்தரவுகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.   இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில், போலீசார் சாந்தகுமார் மீது சிறுமியை பாலியல் துன்புறுத்தல், கொலை மிரட்டல், போக்சோ உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, நேற்று கைது செய்தனர்.

Related Stories: