ஈரோடு, டிச. 12: ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து சீரமைப்பு, கோவில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஊர்காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபி ஆகிய இடங்களில் ஊர்க்காவல் படை பிரிவு இயங்கி வருகிறது. ஊர்காவல் படைபிரிவில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு அண்மையில் 14பெண்கள் உட்பட 87பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவச் சான்று, உடற்தகுதி சான்று உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது. இறுதியாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின், அவர்களுக்கு கடந்த 10ம் தேதி முதல் ஈரோடு ஆணைக்கல்பாளையத்தில் போலீஸ் ஆயுதப்படை வளாகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி 40 நாட்கள் அளிக்கப்படும். என ஊர்காவல் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.