ஈரோடு, டிச.12: ஈரோட்டில் எஸ்.கே.எம் அனிமல் பீட்ஸ் மற்றும் புட்ஸ் நிறுவனத்தில் பூர்ணா என்ற பெயரில் ரைஸ் பிரான் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், சந்தன மணம் கொண்ட விளக்கேற்றும் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. 1,300 டன் சமையல் எண்ணெய் தயாரிக்கப்பட்டு தென் இந்தியா முழுவதும் விற்பனையாகிறது. இந்நிலையில் 12 டன் தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் வகையிலான 2 இயந்திரங்களுடன் கூடிய புதிய ஆலை சாவடி பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் எஸ்.கே.எம் நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் சந்திரசேகர், இயக்குநர் சியாமளா ஷர்மிலி, மேலாளர் முருகேசன், விற்பனை மேலாளர் ஆலன் ஜூவகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.