ஈங்கூர், சிப்காட் பகுதியில் மின்நிறுத்தம்

ஈரோடு, டிச. 12:   ஈங்கூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 14ம் தேதி நடப்பதால், அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெருந்துறை தெற்கு பகுதி, கொங்கு காலேஜ், நந்தா காலேஜ், மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டிச்சிபாளையம், அனுமன்பள்ளி, அவல்பூந்துறை, ஈங்கூர், பாலப்பாளையம், மு.பிடாரியூர் வடக்குப்பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நெசவாளர் காலனி, பெருந்துறை ஆர்.எஸ்.ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இதேபோல பெருந்துறை சிப்காட் பகுதியில் 13ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், அன்று காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை பெருந்துறை வடக்கு மற்றும் நகர் பகுதி, சிப்காட் வளாகம், சிலேட்டர் நகர், ஓலப்பாளையம், திருவாச்சி, கந்தாம்பாளையம், வள்ளியம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளதாக மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: