கோபி, டிச. 12: விபத்தில் பலியான வாலிபரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. கோவை பெரியநாய்க்கன்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் மணிகண்டன் (26). தனியார் மருத்துவமனை ஊழியர். இவர் கடந்த 4.1.2009ம் தேதி ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்றபோது, கோவை - திருச்சி சாலையில் காளிவேலாம்பட்டி பிரிவு அருகே எதிரே வந்த அரசு பஸ் மோதியதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த வழக்கு கோபியில் உள்ள விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த 21.12.2011 அன்று மணிகண்டனின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சத்து 89 ஆயிரம் இழப்பீடு வழங்க போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் மணிகண்டனின் குடும்பத்தார் இழப்பீடு குறைவாக உள்ளது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதைத்தொடர்ந்து மணிகண்டனின் குடும்பத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 5.2.2018 அன்று ரூ.10 லட்சத்து 18 ஆயிரத்து 200 மற்றும் 7.5 சதவீத வட்டியுடன்
வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.