டிப்போ அதிகாரியை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, டிச. 12: ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் உள்ள சிக் லைனில் எஸ்ஆர்எம்யு., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு கிளை செயலாளர் தர்மன் தலைமை வகித்தார். துணை செயலாளர் கோபிநாத், பிரதீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஈரோடு கேரேஜ் மற்றும் வேகன் டிப்போவில் அதிகாரி 11 ஆண்டுகளாக பணியிடம் மாற்றம் பெறாமல், ஒரே இடத்தில் பணியாற்றி வருவதை கண்டித்தும், அவரை பணியிடம் மாற்றம் செய்ய கோரியும், அவர் சர்வதிகார போக்கூடன் ஊழியர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதை கண்டித்தும், ரயில்வே ஊழியர்கள் அலுவலகத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்றும் பணி இடைவேளையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories: