ராணிப்பேட்டையில் தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து

ராணிப்பேட்டை, டிச.12: ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் லாலாப்பேட்டை சாலையில் உள்ள தனியார் பிளாஸ்டிக் மற்றும் மர தொழிற்சாலையில் நேற்று இரவு 7 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது. இதில் தொழிற்சாலையில் இருந்த மரக்கட்டைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் தீயில் கருகின.இதுகுறித்து அப்பகுதி மக்கள் ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையம் மற்றும் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் கமலக்கண்ணன் மற்றும் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சுரேஷ் தலைமையில் தீயணைப்பு படையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் பல ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து தீயில் கருகியது. இதனால் லாலாபேட்டை அம்மூர் சாலையில் 2 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories: