×

பைக்கில் சென்ற வாலிபர்களை வழிமறித்து தாக்கிய கும்பல் கைது

காலாப்பட்டு, டிச. 12: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள அனிச்சங்குப்பம் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் விமல்ராஜ் (29). இவரது நண்பரான அதே பகுதியை சேர்ந்த தினேஷ் (28) உடன் அருகில் உள்ள மீனவ கிராமமான முதலியார்குப்பத்திற்கு பைக்கில் சென்றனர். அப்போது முதலியார்குப்பத்தை சேர்ந்த சுகுமார், விமல்ராஜ் மற்றும் தினேசை வழிமறித்தார். ஏற்கனவே இவர்களுக்குள் முன் விரோதம் இருந்ததால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சுகுமார் தனது நண்பர்கள் இளங்கோ (31), ஞானவேல் (31), விக்கி (25) ஆகியோரோடு சேர்ந்து விமல்ராஜையும், தினேசையும் சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து விமல்ராஜ் சுகுமார் மீது கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த சம்பவத்திற்கு பின்னர் விமல்ராஜூம், தினேசும் அவர்களது நண்பர்கள் வெங்கடேசன் (25), காளிதாஸ் (26) ஆகியோரோடு சேர்ந்து சுகுமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து சுகுமாரின் உறவினர் அன்பழகன் விமல்ராஜ் தரப்பினர் மீது புகார் அளித்தார்.  இதை தொடர்ந்து இருதரப்பினர் மீதும் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் முதலியார்குப்பத்தை சேர்ந்த சுகுமார், இளங்கோ, ஞானவேல் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களின் நண்பர் விக்கியை தேடி வருகின்றனர். அதேபோல மற்றொரு தரப்பை சேர்ந்த விமல்ராஜ், தினேஷ், வெங்கடேசன், காளிதாஸ் ஆகியோரையும் தேடி வருகின்றனர். 

Tags : men ,
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட் கார்சியா சுட்டுக்கொலை!