×

சிறு வயதில் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தார் அத்தை கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

சென்னை, டிச.12: சிறு வயதில் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த எனது அத்தை கணவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண் இன்ஜினியர் ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த  பெண் இன்ஜினியர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ேநற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:  எனது சொந்த ஊர் குன்னூர். நான் 7ம் வகுப்பு படிக்கும் போது எனது அத்தையின் கணவர் கணேஷ் வீட்டில் தனியாக இருக்கும்போது என்னை பாலியல் ரீதியாக ெதால்லை கொடுத்தார். அதோடு இல்லாமல் காரில் செல்லும் போது, பின் இருக்கையில் அமர்ந்து தொந்தரவு கொடுத்தார். இதுகுறித்து நான் அப்போதே எனது பெற்றோரிடம் தெரிவித்தேன். அவர்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நான் பிளஸ் 2 படிக்கும் போது வீட்டில் அனைவரும் இருக்கும் போது எனது அறைக்கு வந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். அதன் பிறகு நான் இன்ஜினியரிங் படித்து முடித்தேன். படித்து முடித்த உடன் எனது பெற்றோர் சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு திருமணம் ெசய்ய முடிவு செய்தனர். எனது அத்தை கணவர் கணேஷ்  கொடுத்த தொல்லை காரணமாக நான் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தேன். இதனால் எனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறி பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டேன்.

இந்த திருமணம் நடக்க வில்லை என்றால் எனது தந்தை தற்கொலை ெசய்து கொள்வேன் என்று மிரட்டியதால் வேறு வழியின்றி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டேன். திருமணம் ெசய்த பிறகு எனது கணவருடன் நான் உடல் ரீதியாக இதுவரை  ஒன்று சேரவில்லை. நாங்கள் ஒன்று சேரும்போது எனக்கு பழைய நினைவுகள் வந்து அருவருப்பாக உள்ளது. மீடூ வந்த பிறகுதான் எனது அத்தை கணவர் கணேசன் மீது புகார் கொடுக்க எனக்கு தைரியம் வந்தது. எனவே, சிறு வயதில் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த ஊட்டியை சேர்ந்த எனது அத்தை கணவர் கணேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் செய்த தவறால் இன்று என் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கணேஷ் மீது போலீஸ் கமிஷனர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED புதுப்பாளையம் ஆரணியாற்றில் ₹20...