×

மதுபானம் கொடுக்க மறுத்ததால் டாஸ்மாக் பார் ஊழியருக்கு வெட்டு

ஆவடி, டிச.12: டாஸ்மாக் பாரில் காலையில் மதுபானம் கொடுக்க மறுத்ததால், அங்கிருந்த ஊழியரை சரமாரியாக வெட்டிய ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். ஆவடி காமராஜர் நகர், ஆற்றோர தெருவில் டாஸ்மாக் கடை உள்ளது. இதன் அருகிலேயே பார் செயல்படுகிறது. இங்கு ராமநாதபுரத்தை சேர்ந்த அருண் (23) என்பவர் ஊழியராக  வேலை பார்க்கிறார். இந்நிலையில், நேற்று காலை அருண், பாரை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாலாஜி (26) அங்கு சென்று, அருணிடம் மதுபாட்டில் கேட்டுள்ளார். அதற்கு, மதுபாட்டில் இல்லை. 12 மணிக்கு கடை திறக்கும்போது வாங்கி கொள்ளுங்கள் என கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த பாலாஜி, அருகில் உள்ள மீன் கடையில் இருந்து கத்தி எடுத்து வந்து, அருணை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், தலையில் காயமடைந்த அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். உடனே பாலாஜி, அங்கிருந்து தப்பிவிட்டார்.உடனடியாக அக்கம்பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த அருணை மீட்டு, ஆவடி உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.புகாரின்படி ஆவடி இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த பாலாஜியை நேற்று மாலை கைது செய்தனர். பின்னர் அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Dosmachi ,
× RELATED திருவள்ளூர் அருகே தீ விபத்தில் சவுக்கு தோப்பு எரிந்து நாசம்