இருதரப்பினர் மோதல் 5 பேர் மீது வழக்கு

திருக்கோவிலூர், டிச. 12: திருக்கோவிலூர் அடுத்த அரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை(43). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கண்ணு மகன் ஏழுமலை என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று, ஏழுமலை தனது வீட்டின் முன்புறம் இருந்தபோது அங்கு வந்த கண்ணு மகன் ஏழுமலை மற்றும் அவரது ஆதரவாளர்கள் அவரை ஆபாசமாக திட்டி சரமாரியாக தாக்கியுள்ளனர். பதிலுக்கு ஏழுமலை, கண்ணு மகன் ஏழுமலையை ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளார். இது குறித்து ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் கண்ணு மகன் ஏழுமலை மற்றும் அஞ்சடி, அஞ்சடி மகன்கள் கவியரசன், கார்த்திகேயன் ஆகிய 4 பேர் மீதும், கண்ணு மகன் ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் ஏழுமலை மீதும் திருக்கோவிலூர் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து, இதில் ஏழுமலை, கவியரசன், கார்த்திகேயன், கண்ணு மகன் ஏழுமலை ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: