×

சென்னை மாநகராட்சியில் 15 மண்டல நகர விற்பனை குழு தேர்தல் முடிந்தது

சென்னை, டிச. 12: சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களுக்கான நகர விற்பனை குழு உறுப்பினர் தேர்தல் முடிந்து உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தெருவோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் சாலையோர வியாபாரம் முறைப்படுத்துதல் சட்டத்தை கடந்த 2014ம் ஆண்டு மத்திய அரசு இயற்றியது. இதனை பின்பற்றி தமிழ்நாடு அரசு 2015ம் ஆண்டு தெரு வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் தெருவோர வியாபாரம் முறைப்படுத்துதல் விதிகளை உருவாக்கியது. இதன்படி சென்னை தெருவோர வியாபாரிகளை கணக்கெடுக்கும் பணி நடந்தது. அதன் மூலம்  39 ஆயிரம்  பேர் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் பயோ மெட்ரிக்  முறையில் பதிவு செய்யப்பட்டு மாநகராட்சி சார்பில் அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. தொடர்ந்து தெருவோர வியாபாரிகள் சட்ட விதிகளின்படி, நகர விற்பனை குழுவை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.

இதன்படி அனைத்து மண்டலங்களிலும் நகர விற்பனை குழு தேர்தல் முடிந்து உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்பட்டு விட்டனர். இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: நகர விற்பனை குழுவிற்கு மண்டல அதிகாரி தலைவராக இருப்பார். மண்டல செயற்பொறியாளர், இரு காவல் துறை அதிகாரிகள், என்ஜிஓ மற்றும் குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்ந்தவர்கள் நியமன உறுப்பினகர்களாக தேர்வு செய்யப்படுவர். இதைத் தவிர்த்து   தெருவோர வியாபாரிகள் 6 பேர் தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். இதன்படி முதல் தேர்தல் கடந்த செப்டம்பர் 20ம் தேதி நடந்தது. கடைசி கட்ட தேர்தல் கடந்த 8ம் ேததி நடந்தது. இதன்படி பார்த்தால் 15 தொகுதிகளிலும் நகர விற்பனை குழ அமைக்கப்பட்டுவிட்டது.இதனைத் தொடர்ந்து அனைத்து மண்டலத்திலும் நகர விற்பனை குழு கூட்டம் நடைபெறும். அதன்படி அந்த மண்டலங்களில் உள்ள தெருவோர வியாபாரிகளை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை
9 மண்டலத்தில் மட்டும் நகர விற்பனை குழு கூடியுள்ளது. அதன்படி மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை முறைப்படுத்தும் பணி நடந்து வரு
கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : election ,Regional City Sales Committee ,Chennai Corporation ,
× RELATED தேர்தல் தினத்தன்று ஊழியர்களுக்கு...