திருவெண்ணெய்நல்லூர், டிச. 12: திருவெண்ணெய்நல்லூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு நேற்று அடிப்படை வசதி வேண்டி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது. நேற்று இரண்டாவது நாளாக சித்தலிங்கமடம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது. இதில் சொந்த மாவட்டத்திற்கு பணி மாறுதல், கிராம நிர்வாக அலுவலகத்தில் மின்சாரம், குடிநீர், கழிவறை, கணினி, இணையதள வசதி உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.