×

கோஷ்டி மோதல்

கருங்கல், டிச. 12: கருங்கல் அருகே கம்பிளார் பகுதியை சேர்ந்தவர் ஆலன்பாபி. இவர் அதேப்பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் 4 பேருடன் கம்பிளாரில் குடில் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது, மாதாபுரம் பகுதியை சேர்ந்த வினோஜ், கில்மர் ஆகியோர் அங்கு வந்தனர். அனைவரும் நண்பர்கள். கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தவர்களிடையே ஒருகட்டத்தில் வாய்தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில், ஆலன்பாபி மற்றும் அவரது நண்பர்கள் பெனின், ஸ்டெமின் ஜோஸ், சஜி, அஜித்மோன் ஆகியோர் சேர்ந்து வினோஜ், கில்மர் இருவரையும் சரமாரியாக அடித்து உதைத்தனர்.இதில், வினோஜ், கில்மர் இருவரும் காயமடைந்தனர். கில்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில், கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 5 பேரை கைது செய்தனர்.

Tags : conflict ,
× RELATED விருதுநகர் அருகே இருதரப்பினர் மோதலில் 9 பேர் மீது வழக்கு