×

நாகர்கோவிலில் ஆர்.பி.ஆர் - டாக்டர் னிவாச கண்ணன் இல்ல திருமண விழா நாளை நடக்கிறது

நாகர்கோவில், டிச. 12: நாகர்கோவில் பொன்னப்ப நாடார் காலனியைச் சேர்ந்தவர் இரா.பாலகிருஷ்ணன். ஆர்.பி.ஆர்.குரூப்ஸ் நிறுவனங்களின் தலைவர். இவரது மனைவி சுசீலா பாலகிருஷ்ணன். இந்த தம்பதிகளின் மகன் இன்ஜினியர் ஆர்.பி.ராகுல். இவருக்கும், நாகர்கோவில் டாக்டர் னிவாசகண்ணன் - ரமணி தம்பதியினரின் மகள் டாக்டர் கோபிகா பிரியதர்ஷினிக்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டுள்ளது.இன்ஜினியர் ஆர்.பி.ராகுல் - டாக்டர் கோபிகா பிரியதர்ஷினியின் திருமணம் நாளை (13ம் தேதி) நாகர்கோவில் அருகே தேரேகால்புதூரில் உள்ள கங்கா கிராண்ட்யுர் திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடக்கிறது. இதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. வரவேற்பு நிகழ்ச்சி நல்லபெருமாள் சன்ஸ் பங்குதாரர் ரவீந்திரன் - இந்திரா ரவீந்திரன் தலைமையில் நடக்கிறது. வரவேற்பு விழாவில் பி.எஸ்.என். குரூப்ஸ் தலைவர் சுயம்பு நாடார் - ருக்மணி சுயம்பு, இந்திரா ராமசாமி, கல்பனா, முன்னாள் எம்.பி. எம்.சி. பாலன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை நல்லபெருமாள் சன்ஸ் பங்குதாரர் ரவீந்திரன், இந்திரா ரவீந்திரன், மணமகனின் தந்தை இரா.பாலகிருஷ்ணன் - சுசீலா பாலகிருஷ்ணன், மணமகளின் தந்தை டாக்டர் னிவாசகண்ணன் - ரமணி, மணமகனின் அத்தான் பிரசன்னா ஐ.ஏ.எஸ்- மாலதி, இன்ஜினியர் ஜெயலெட்சுமி ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags : Nenivasa Kannan ,Nagercoil ,RPR ,wedding ceremony ,
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு