×

10, 11, 12ம் வகுப்புகளுக்கு அரையாண்டு பொதுத்தேர்வு துவங்கியது

நெல்லை, டிச. 11: நடப்பு கல்வியாண்டில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், சிறப்பு பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிகளுக்கு அரையாண்டு பொதுத்தேர்வு டிசம்பர் 11ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.அதன்படி பொதுத்தேர்வுகள் நேற்று துவங்கியது. மாநகர பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் முதல் நாளான நேற்று, மொழிப்பாடத்திற்கான தேர்வு நடந்தது. அனைத்து பாடங்களுக்கும் தமிழக அளவில் ஆண்டு இறுதிதேர்வு போல் பொதுவான வினாத்தாள் தயாரிக்கப்பட்டு உள்ளது. 10, 11, 12ம் வகுப்புகளுக்கு வரும் 22ம் தேதி வரை தேர்வுகள் நடக்கிறது. அதன்பிறகு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்படுகிறது. புத்தாண்டுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது.

Tags : seminar ,
× RELATED மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் முதியோர்கள் குறித்த தேசிய கருத்தரங்கம்