×

கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது

நெல்லை, டிச. 11: நெல்லை தச்சநல்லூர் அடுத்த தாராபுரத்தில் நேற்று முன்தினம் நேருக்கு நேராக இரு கார்கள் மோதிக் கொண்டன. இதில் மதுரையில் இருந்து வந்த காரில் டிரைவர் குமார் தப்பி ஓடினார். சந்தேகமடைந்த போலீசார், காரை சோதனையிட்ட போது 6 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிந்தது. இதை பறிமுதல் செய்த தச்சநல்லூர் போலீசார், கடத்தி வந்த மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த பிரேம்குமார் (39) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கூட்டாளியான தாழையூத்தை சேர்ந்த கார்த்திக் (27) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். மேலும் தப்பியோடிய கார் டிரைவர் குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லையில்

Tags : Ganja ,
× RELATED 22 கிலோ கஞ்சா கடத்திய வழக்கு ஆந்திர...