×

இலவச எரிவாயு இணைப்பு வழங்கல்

திருச்செந்தூர், டிச. 11:  உஜ்வலா தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினம் சண்முகபுரத்தில் பாரத் கேஸ் விநியோகஸ்தர் வேலவன் கேஸ் ஏஜென்சி சார்பில் திருச்செந்தூர் பகுதியில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள பெண் பயனாளிகளுக்கு பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வேலவன் கேஸ் உரிமையாளர் சுப்புலட்சுமி தலைமை வகித்தார். நிறுவன மேலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினர் தீயணைப்புத்துறை அலுவலர் நட்டார்ஆனந்தி கலந்து கொண்டு சிலிண்டர் பாதுகாப்பாக உபயோகிக்கும் முறை குறித்து பேசினார். விழாவில் ஏராளமான பெண்கள் மற்றும் வேலவன் கேஸ் ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை  கோமதி
நாயகம் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

Tags :
× RELATED புத்தன்தருவை கூட்டுறவு சங்கத்தின் வளர்ச்சி நிதி வழங்கல்