கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிள்ளிகுளம் கல்லூரி மாணவர்கள் நிவாரண பொருட்கள் வழங்கல்

செய்துங்கநல்லூர், டிச.11: கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில்  கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி பிரித்து, நேரில் சென்று வழங்கினர். கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பொருட்டு  கிள்ளி குளம் வேளாண்மை கல்லூரி  நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள்  நிவாரண பொருட்கள்  சேகரித்தனர். தொடர்ந்து  கல்லூரி மாணவர்கள் 30 பேர்  பாதிக்கப்பட்ட பகுதிகளான.கரம்பன்குடி,  ேபராவூரணிக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினர். ஏற்பாடுகளை கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்  ராஜாபாபு செய்திருந்தார்.

Related Stories: