பெண்ணை மிரட்டியவர் கைது

 நாசரேத்,டிச. 11: நாசரேத் அருகே குடிக்க பணம் கொடுக்க மறுத்த பெண்ணுக்கு கொலைமிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.  நாசரேத் அருகே  பிள்ளையன்மனை வடக்கூரைச் சேர்ந்தவர் குழந்தைவேல் மனைவி முனியம்மாள் (33). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைவேல் இறந்து விட்டார். இதனால் முனியம்மாள் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் இருதயம் மகன் பொன்இசக்கி (36). இவர் முனியம்மாவிடம் குடிக்க அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார்.  இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. குடிக்கபணம் கொடுக்க மறுத்ததால் முனியம்மாளை பொன்இசக்கி அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முனியம்மாள் நாசரேத் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் துரை வழக்குபதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த பொன் இசக்கியை கைது செய்தார்.

Related Stories: