×

கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்

பெரம்பலூர்,டிச.11: பெரம்பலூர் கல்லூரிக்குச்சென்றமாணவி வீடுதிரும்பவில்லை இது குறித்து  அவர் தாய் போலீஸில் புகார்.
பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர்அருகேயுள்ள அய்யலூர் கிராமத்தைச் சேர்ந் தவர் ராமலிங்கம் மகள் புவனேஷ்வரி(21). பட்டதாரியான இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் பிஎட் கல்லூரியில் 2ம்ஆண்டு கல்விபயின்று வந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரிக்குச்சென்ற புவனேஷ்வரி பின்னர் மாலையில் வீடுதிரும்ப வில்லை.  மகள் வீடுதிரும்பாததால் புவனேஷ்வரியின் தாய், அனுராதா என்பவர் அருகில் உள்ள கிராமத்து உறவினர்கள் வீடுகளுக்குச் சென்றுள்ளாரா என விசாரித்துள்ளார். அங்கு அவர் செல்லவில்லை. இதனைத் தொடர்ந்து கல்லூரிமுடிந்து வெளியேறியவர் பின்னர் எங்குசென்றார் எனத் தெரியாததால் மகளை கண்டுபிடித்துக் கொடுக்கும்படி அனுராதா மருவத்தூர் போலீஸில் புகார்கொடுத்துள்ளார். போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED வாக்களிப்பதன் அவசியம் குறித்து...