×

பெரம்பலூரில் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

பெரம்பலூர், டிச. 11:  பெரம்பலூரில் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் சாந்தா தலைமை வகித்தார். டிஆர்ஓ அழகிரிசாமி உறுதிமொழி படிவத்தை வாசிக்க கலெக்டர் சாந்தா மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜராஜன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலஅலுவலர் மஞ்சுளா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags : Human Rights Day ,Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...