அரியலூர், டிச. 11: ஏலாக்குறிச்சி அருகே மணல் கடத்தி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. அரியலூர் மாவட்டம் திருமானூர் சப்-இன்ஸ்பெக்டர் மேனகா தலைமையிலான போலீசார், ஏலாக்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை மறித்து சோதனை நடத்தினர். அதில் தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் இருந்து டிப்பர் லாரியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்தி வந்த புதுவேட்டக்குடி கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் (23) என்பவரை கைது செய்ததுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.