×

நாகை மாவட்டத்தில் விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்

கொள்ளிடம்,டிச,11: பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாகை மாவட்டம் கொள்ளிடம் மேற்கு வட்டார காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் கொள்ளிடத்தில் நடைபெற்றது. மேற்கு வட்டார தலைவர் ஞானசம்மந்தம் தலைமை வகித்தார். நகர தலைவர் பிரகாசம் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் படேல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் சோனியாகாந்தி பிறந்த தினவிழாவையொட்டி கொடியேற்ற வேண்டும். மயிலாடுதுறையில் இருந்து கொள்ளிடம் வழியாக சென்னைக்கு பயணிகள் ரயில் இயக்க வேண்டும். மழையால் சேதமடைந்த கிராம சாலைகளை மேம்படுத்த வேண்டும்.
இந்த ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும். விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் கொள்ளிடம் ரயில்வேபாலம் அருகே குப்பைகள் கொட்டுவதை உடனடியாக நிறுத்த உள்ளாட்சி நிர்வாகத்தை கேட்டுக்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Nagapattinam district ,
× RELATED பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் போலீசுக்கு...