×

பள்ளி மாணவன் திடீர் மாயம்

கரூர், டிச. 11: கரூர் கருப்பாயி கோயில் தெருவை சேர்ந்தவர் மஞ்சுளா. இவரது உறவினர் மகன் ராஜேஷ்(10), கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா கிரியூரை சேர்ந்த ராஜேஷ் தனது அத்தை வீட்டில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். ராஜேஷ் நேற்றுமுன்தினம் கடைக்கு சென்று விட்டு வருவதாக கூறி சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.இது குறித்து  கரூர் டவுன் போலீசில் மஞ்சுளா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : school student ,
× RELATED சத்தியமங்கலம் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி