×

கரூரில் மனித உரிமைகள் கருத்தரங்கம்

கரூர், டிச. 11:   மனித உரிமைகள் கருத்தரங்கம் கரூரில் நடைபெற்றது. மாநிலம் தழுவிய மனித உரிமைகள் கருத்தரங்கம் தலித் விடுதலை இயக்கம் சார்பில் கரூரில் நேற்று நடைபெற்றது. சசிகுமார் தலைமை வகித்தார். சுந்தரம், அங்கமுத்து, நிசோக்ராஜா, சாந்திபானிசாமி, ராஜகோபால், கருப்பையா பேசினர். பாலியல் ஒடுக்குமுறைகளும் தலித் பெண்களும் என்ற தலைப்பில் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, வன்கொடுமை தடுப்பு சட்டமும், காவல்துறையும் என்ற தலைப்பில் அழகுமணி,  இன்றைய அரசியல் சூழலும், தலித் இயக்கங்களும் என்ற தலைப்பில் கோகுல்கண்ணன், நிலமீட்பு போராட்டங்களும், தலித் மக்களும் என்ற தலைப்பில் நிக்கோலஸ் ஆகியோர் பேசினர். மாநில தலைவர் ஞானசேகரன் நிறைவுரையாற்றினார்.

Tags : Human Rights Seminar ,Karur ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்