×

ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில்

க.பரமத்தி, டிச.11: ஒரே வாரத்தில் கொப்பரை தேங்காய் விலை கிலோ ரூ.3உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் கிராம புற பகுதியில் ஏராளமான தென்ணை மரங்களை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். தங்களது தேவைக்கு மேல் உள்ள தேங்காய்களை உடைத்து காய வைத்து தங்களது தேவைக்கு எண்ணை எடுக்கின்றனர். பிறகு மீதம் உள்ள பருப்பினை வெளி மாவட்ட பகுதியில் இயங்கும் கொடுமுடி அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் திங்கள் தோறும் தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் ஏலம் விடப்படுகிறது.

நேற்று நடந்த ஏலத்திற்கு 64மூட்டைகளை ஏலம் விடப்பட்டது. அதில் கொப்பரை தேங்காய் குறைந்த பட்சமாக கிலோ ரூ.94க்கும் அதிக பட்சமாக கிலோ ரூ.105க்கு ஏலம் போனது. கடந்த வாரத்தை விட ரூ.3அதிகமாக ஏலம் போனது. இதேபோல 4640 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது. அதில் தேங்காய் சராசரியாக ஒரு கிலோ ரூ.25க்கும், அதிக பட்சமாக ரூ.31க்கும் ஏலம் போனது. கடந்த வாரத்தை விட கிலோவிற்கு ரூ.4அதிகமாக ஏலம் போனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags :
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு