×

பசுமை வீடு வழங்கக்கோரி ஆட்சியரிடம் விதவை பெண் மனு

விழுப்புரம், டிச. 11: விழுப்புரம் அருகே ப.வில்லியனூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த நெடுஞ்செழியன் மனைவி அருந்தாமரை. இவர் ஆட்சியர் சுப்ரமணியனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் இறந்துவிட்டார். ஆதரவற்ற விதவையான எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை செய்து பிழைத்து வருகிறோம். இந்நிலையில் கடந்த மாதம் 5ம் தேதி எதிர்பாராத விதமாக எனது கூரை வீடு தீப்பிடித்து முற்றிலும் எரிந்துவிட்டது. இதனால் எவ்வித உடைமைகளையும் எங்களால் மீட்க முடியவில்லை. தகவல் அறிந்ததும் விழுப்புரம் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அருகில் உள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் அணைத்தனர். பிள்ளைகளை வைத்து வாழ வீடில்லாமல் உள்ளேன். எனவே ஆட்சியர் நடவடிக்கை எடுத்து அரசு பசுமைவீடு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : widow ,house ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்