×

மணல் கடத்தலில் ஈடுபட்ட மாட்டு வண்டி பறிமுதல்

உளுந்தூர்பேட்டை, டிச. 11: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் மற்றும் போலீசார் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வைபாளையம் கிராமத்தில் மாட்டு வண்டியில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்ட சங்கர் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை