விழுப்புரம், டிச. 11: வானூர் அருகே தரமில்லாமல் சாலை போடப்பட்டதால் 20 நாட்களில் மீண்டும் பல்லாங்குழியாகி விட்டதாக புகைப்பட ஆதாரத்துடன் ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்டம் வானூர் குயிலாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியர் சுப்ரமணியனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வனத்தாம்பாளையம் பம்பை ஆறுவரை 1700 மீட்டர் தூரம் சாலையும், 350 மீட்டர் தூரம் சிமெண்ட் சாலையும் போடுவதற்கு கண்டமங்கலம் பிடிஓ அலுவலம் மூலம் ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தார் சாலை அமைக்க ஒப்பந்தம் விடும்போது மிஷன் ரோடுக்கு டெண்டர் விடப்பட்டது. ஆனால் ஒப்பந்தம் எடுத்த நபர் 20 எம்எம் அளவில் கையால் ரோடு போட்டு கொடுத்துள்ளார்.