மயிலம், டிச. 11: மயிலம் ஒன்றியம் கூட்டேரிப்பட்டில் திமுக தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் அன்சாரி தலைமை தாங்கினார். மயிலம் ஒன்றிய செயலாளர்கள் சேதுநாதன், மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இலக்கிய அணி
தியாகராஜன் வரவேற்றார். மயிலம் எம்எல்ஏ மாசிலாமணி, முன்னாள் முதல்வர் கலைஞரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார், பின்னர் பிரசார கூட்டத்தில் சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட துணை செயலாளர்கள் மலர்மன்னன், வசந்தா, மாவட்ட பெருளாளர் ரவி, வழக்
கறிஞர் அணி அருணகிரி, அவை தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட பிரதிநிதிகள் ஜெயராமன், பாலு, தனுசு ஆகியோர் பேசினர். ஒன்றிய துணை செய
லாளர் செல்வகுமார், ஒன்றிய இளைஞரணி ராமமூர்த்தி, சங்கர், சதீஷ், விவசாய அணி பாலசுந்தரம், சாரங்கபாணி, கொடியம் குமார், முன்னாள் கிளைச் செயலாளர் ஏழுமலை உட்பட பலர் கலந்துகொண்டனர். கிளை செயலாளர் சதாம் உசேன் நன்றி கூறினார்.