ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்

உளுந்தூர்பேட்டை, டிச. 11: உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய இந்து நடுநிலைப்பள்ளியில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் தலைவர் ராஜாராம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் லூர்துசேவியர் வரவேற்றார். வட்டார தலைவர் அருள்ஜோதி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாநில துணை செயலாளர் ராஜசேகர், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பு ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு போராட்டம் ஆயத்தம் குறித்து முடிவு செய்வது. டெல்லியில் நடைபெற உள்ள அகில இந்திய மாநாட்டில் 500 பேர் கலந்துகொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

Related Stories: