சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

திண்டிவனம், டிச. 11: திண்டிவனத்தில் விபத்துக்களை குறைக்க காவல்துறையினர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். திண்டிவனம் உட்கோட்டம் சார்பில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை டிஎஸ்பி திருமால் துவக்கி வைத்தார். பின்னர் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார். சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டாட்சியர் பிரபு வெங்கடேஷ்வரன், ஆய்வாளர் சீனிபாபு உள்ளிட்டகாவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Related Stories: