×

விபத்து ஏற்படுத்தும் சாலையோர முட்செடிகளை அகற்ற வேண்டும்

உளுந்தூர்பேட்டை, டிச. 11: உளுந்தூர்பேட்டையில் இருந்து விழுப்புரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் முக்கிய வழித்தடமாக இருப்பது செங்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் பகுதியில் பெரிய அளவிலான வளைவு உள்ளது. இதனால் டோல்கேட்டில் இருந்து விழுப்புரம் நோக்கி செல்லும் வாகனங்கள் இந்த வளைவில் செல்லும்போது பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலையின் ஓரம் உள்ள முட்புதர்களால் வாகனங்கள் வருவது தெரியாமல் சாலையை கடக்க முயலும் போது விபத்தில் சிக்கி ஏராளமானவர்கள் உயிரிழந்து வருகின்றனர். இதுகுறித்து நெடுஞ்சாலை பராமரிப்பு துறை அதிகாரிகளிடம் செங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகின்றனர்.

எனவே தினந்தோறும் நடைபெற்று வரும் விபத்துக்களை தடுக்கவும், மேலும் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கவும் உடனடியாக நெடுஞ்
சாலைத்துறை அதிகாரிகள் செங்குறிச்சி கிராமத்தில் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள முட்செடிகள் மற்றும் மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை