×

இலவச வீட்டுமனை பட்டா வழங்கியதில் முறைகேடு

விருத்தாசலம், டிச. 11: வேப்பூர் அருகே உள்ள எஸ். நரையூர் கிராமத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில் இலவச மனைப்பட்டாவுக்கு பயனாளிகள் தேர்வு செய்து வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக மக்கள் மனு அளித்துள்ளனர்.விருத்தாசலம் அடுத்த வேப்பூர் அருகேயுள்ள எஸ்.நரையூர் கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் வீடில்லா ஏழை எளியோருக்கு, அரசு
ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இலவச வீட்டு மனைப்பட்டா திட்டத்தில் 44 பயனாளிகளுக்கு கடந்த மாதம் 29ம் தேதி நடைபெற்ற மனுநீதி விழாவில் கலெக்டர் அன்புச்செல்வன் வழங்கினார். இந்நிலையில் அந்த வீட்டு மனை பட்டாவுக்காக பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு உள்ளதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று விருத்தாசலம் சார்ஆட்சியர் பிரசாந்தை சந்தித்து மனு அளித்தனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை