தவறி விழுந்து விவசாயி பலி

செஞ்சி, டிச. 11: செஞ்சி அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார். செஞ்சி அடுத்த வடதரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி (54). விவசாயி. இவர் நேற்று மாலை தனது சொந்த டிராக்டரில் விவசாய நிலத்திற்கு சென்று விவசாயம் செய்துவிட்டு வீட்டிற்கு டிராக்டரில் வந்தார். அப்போது டிராக்டரில் இருந்த ஆசை தம்பி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து செஞ்சி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: