×

மணல் கடத்தி வந்த மினிவேன் பறிமுதல்

வில்லியனூர், டிச. 11: வில்லியனூர் சங்கராபரணி ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோனேரிக்குப்பம் சங்கராபரணி ஆற்றில் மணல் ஏற்றி வந்த மினி வேனை ரோந்து சென்ற வருவாய்த்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது மினி வேனில் இருந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். இதனை தொடர்ந்து மணலுடன் மினி வேனை கைப்பற்றி வில்லியனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். துணை தாசில்தார் நித்தியானந்தம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...