×

பாலங்களில் மணல் குவியல் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

பண்ருட்டி, டிச. 11:  பண்ருட்டி அருகே கண்டரக்கோட்டை பெண்ணை ஆற்று பாலம், பணிக்கன்குப்பம் கெடிலம் பாலம் ஆகிய இரு பாலங்களின் இருபுறமும் மணல் குவியல்கள் அதிகளவு உள்ளன. ஒவ்வொரு வருடமும் மணல் குவியல்கள் அதிகளவில் உருவாகி வருகின்றன. பாலம் பராமரிப்பு துறையினரால் இவைகள் அகற்றப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வதில்லை. தற்போது மழைக்காலம் என்பதால் மேலும் அதிகளவு மணல் சேர்ந்து காணப்படுகிறது. பாலத்தில் உள்ள மணல் குவியல்களால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். அவசர காலம் பொருட்டு அருகிலுள்ள நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் கூட இவற்றை அகற்றலாம் என மாவட்ட நிர்வாகம் கூறுகிறது. அந்த உத்தரவை யாரும் பொருட்படுத்துவதே கிடையாது. எனவே இனியும் காலம் கடத்தாமல், இரு பாலங்களில் உள்ள மணல் குவியல்களையும் உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Motorists ,bridges ,
× RELATED திருப்பதிசாரம் டோல்கேட்டில் கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி