×

விஷம் குடித்து விவசாயி சாவு

சிதம்பரம், டிச. 11:  சிதம்பரம் குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மகன் திருமுருகன் (38), விவசாயி. இவரது மனைவி முருகவள்ளி (35). இவர் சிதம்பரத்தில் உள்ள கவரிங் கடையில் பணியாற்றி வருகிறார். கணவன், மனைவி இடையே வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 7ம்தேதி திருமுருகன் வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து மயங்கி கிடந்தார். அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் திருமுருகன் இறந்தார்.  இதுகுறித்து முருகவள்ளி சிதம்பரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது