×

226 குடும்பங்களுக்கு மனைப்பட்டா வழங்கல்

விருத்தாசலம், டிச. 11: பெண்ணாடம்  அருகேயுள்ள தி.அகரம் ஊராட்சியில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ஆதிதிராவிட பகுதி மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க கடந்த 25 ஆன்டுகளுக்கு முன்பு ஆதி திராவிட நலத்துறை மூலம் சுமார் 9.5 ஏக்கர் இடம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் பட்டா வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வந்த நிலையில், திட்டக்குடி தொகுதியில் போட்டியிட்ட கணேசன் எம்எல்ஏ  தேர்தல் வாக்குறுதியாக, இப்பகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவதாக உறுதி யளித்தார். அதனடிப்படையில் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு அனைத்து பணி களும் முடிவடைந்தது. இதையடுத்து அனைவருக்கும் பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று தி.அகரத்தில் நடந்தது. கணேசன் எம்எல்ஏ 226 இலவச வீட்டுமனைப்பட்டாக்களை அதற்குரிய குடும்பங்களுக்கு வழங்கினார். இதில் மங்களூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம், தெற்கு ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன், ஒன்றிய அவைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதி சுகுணா, ஒன்றிய துணை செயலாளர் அமிர்தாவேல்முருகன், மாவட்ட ஆதிதிராவிட நல அணி துணை அமைப்பாளர் முருகவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.



Tags : families ,
× RELATED பத்தமடையில் இடிந்து காணப்படும்...