×

புதிய பேருந்து நிலையத்தை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம், டிச. 11:   விருத்தாசலம் அடுத்த பெண்ணாடத்தில் புதிய பேருந்து நிலையத்தை திறக்க கோரியும், அரசு ஆதிதிராவிட மாணவர் விடுதிக்கு பாதை வசதி ஏற்படுத்தி தரக்கோரியும் இந்திய  புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பெண்ணாடம் பேரூராட்சி அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட பொருளாளர் பானுமதி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் கோகுலகிறிஸ்டீபன் கண்டன உரையாற்றினார். கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பெண்ணாடம் புதிய பேருந்து நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும், ஆதிதிராவிட நல மாணவர் விடுதிக்கும் இடையே உள்ள சுற்றுச் சுவரால் மாணவர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றி செல்கின்றனர்.

இதனால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி அவர்களின் உடல் சீர்கேடு ஏற்படுவதுடன், கல்வி நலன் மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே பள்ளிக்கும், விடுதிக்கும் இடையே உள்ள சுற்றுச்சுவரை இடித்து மாணவர்கள் பள்ளிக்கு எளிதில் செல்வதற்கு வழி ஏற்படுத்தி தர வேண்டும் என்று வலியுறுத்தினர்.
முன்னதாக புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேரூராட்சி அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர்.

Tags : Demonstration ,bus stand ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை