×

கிராவல் மண் கடத்தல்

வேப்பூர், டிச. 11: வேப்பூர் அருகே திருட்டுத்தனமாக லாரிகளில் கிராவல் மண்ணை ஏற்றி சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
வேப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் சுபிக் ஷா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வேப்பூர் அடுத்த தொண்டங்குறிச்சியில் திருட்டு தனமாக இரண்டு லாரிகள் மூலம் கிராவல் மண்ணை ஏற்றி செல்வதாக தகவல் வந்தது. அங்கு சென்ற போலீசார் லாரிகளை மடக்கி பிடித்து விசாரித்ததில், அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணியன்(54), பாலக்கிருஷ்ணன்(36) என்பது தெரிய வந்தது.
இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்ததுடன், லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு