×

குளம் ஆக்கிரமிப்பை அகற்ற மனு

விருத்தாசலம், டிச. 11: விருத்தாசலம் அடுத்த ஆலடி அருகேயுள்ள மணக்கொல்லை ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் தாசில்தார் கவியரசை சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: மணக்கொல்லை ஊராட்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பாகுளம் உள்ளது. இந்நிலையில் குளம் ஆக்கிரமிப்பு செய்து சாலை அமைத்துள்ளனர். இதனால் குளத்திற்கு வரும் மழைநீர் தடுத்து நிறுத்தப்பட்டு, விவசாய நிலங்களில் பாய்ந்து செல்வதோடு, வீணாக வெளியே ஓடுகிறது. குளத்தில் மழைநீர் தேங்க முடியாததால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே தனிநபர் அமைத்துள்ள சாலையை அகற்றி,  குளத்திற்கு மழைநீர் வரும்படி, சீரமைத்து தரவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் கவியரசு உறுதியளித்தார்.

Tags :
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு