ஏற்காடு, டிச.11: ஏற்காட்டில் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் முகவர்களுடன், தாசில்தார் ஆலோசனை நடத்தினார். வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியையொட்டி, ஏற்காட்டில் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களுடன், தாசில்தார் முருகேசன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டத்தில், ஒரு சில வாக்காளர்கள் இறந்த பின்னரும், அவர்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பதாகவும், சில வாக்காளர்களின் பெயர்கள் இரண்டு வாக்குச்சாவடி பட்டியலில் இருப்பதாகவும் முகவர்கள் தெரிவித்தனர். மேலும் ஏற்காடு 36வது வாக்குச்சாவடியில், 2 கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் ேமற்பட்ட வாக்காளர்கள் இருப்பதால், அவர்களை பிரித்து 2 வாக்குச்சாவடியில் சேர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.