இந்து மக்கள் கட்சி கூட்டம்

இளம்பிள்ளை, டிச.11: இளம்பிள்ளையில் இந்து மக்கள் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஆடிட்டர் ரமேஷ் பேரவை தலைவர் செங்கோட்டுவேல் தலைமை வகித்தார். செயலாளர் சீனிவாசன் வரவேற்றார். இதில் நிர்வாகிகள் ஆறுமுகம், தங்கவேல், உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில், சேலம் குகை மாரியம்மன் கோயிலில் கடந்த 15 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ளது. எனவே, இந்து அறநிலைய துறையினர் விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில்களின் சொத்துகளை தனியாரிடம் இருந்து மீட்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: