ஆத்தூர், டிச.11: ஆத்தூரில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. ஆத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில்,
50 சதவீகித பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளவர்களில் அவரவர் சொந்த மாவட்டத்தில் பணிபுரிய, மாவட்ட மாறுதல் கோருதல், விஏஒ அலுவலகங்களில் அடிப்படை வசதிகள், லேப்டாப்களுக்கு இணையதள வசதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 5அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில், ஆத்தூர் வட்டார தலைவர் ரகுபதி, கோட்ட செயலாளர் சக்திவேல், கெங்கவல்லி பெரியண்ணன், பெத்தநாயக்கன்பாளையம் அணைமுத்து, பொருளாளர் ஞானவேல், செயலாளர்கள் நல்லவர், முத்தையன், கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ் உள்பட 50க்கும் மேற்பட்ட விஏஓக்கள் கலந்து கொண்டனர்.