×

இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஆத்தூர், டிச.11: ஆத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், தென்குமரை கிராமத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செயல்படும் விஏஒ மற்றும் காட்டுக்கோட்டை வருவாய் ஆய்வாளர் ஆகியோரை கண்டித்து, பழைய பஸ் ஸ்டாண்ட் முன்  ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைவாசல் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். நகர செயலாளர் நாகராஜ், முருகன், மாவட்ட செயலாளர் மோகன், பழங்குடி மக்கள் சங்க மாநில செயலாளர் பரமசிவம், விமலன், விவசாய சங்க மாவட்ட தலைவர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டு, கோஷங்கள் எழுப்பினர்.

Tags : Communist Party of India ,
× RELATED வாக்குச்சாவடியில் தாமரை வடிவ அலங்காரம்