×

திருச்செங்கோட்டில் வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை

நாமக்கல், டிச.11: திருச்செங்கோடு அருகே பெரியார் நகர் பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருச்செங்கோடு பெரியார் நகரை சேர்ந்த மக்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதில், திருச்செங்கோடு நகராட்சி 28 வது வார்டு, பெரியார் நகரில் 150 குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டாக வசித்து வருகின்றனர். இந்த இடத்திற்கு பட்டா வழங்க கடந்த 5 ஆண்டுக்கு முன் வருவாய்த்துறை அதிகாரிகள் அளவீடு செய்தனர். ஆனால், இதுவரை பட்டா தரவில்லை. எனவே, கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து இலவச வீட்டுமனை பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Tags : Tiruchengode ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்