×

போச்சம்பள்ளி அருகே 100 அடி கிணற்றில் விழுந்த தொழிலாளி உயிருடன் மீட்பு

போச்சம்பள்ளி, டிச.11:  போச்சம்பள்ளி அருகே 100 அடி கிணற்றில் விழுந்த தொழிலாளி உயிருடன் மீட்கப்பட்டார். போச்சம்பள்ளி அருகே காட்டு மாவுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஸ்குமார்(26). கட்டிட தொழிலாளியான இவர், நேற்று மாலை டூவீலரில் போச்சம்பள்ளிக்கு புறப்பட்டார். காட்டுவென்றவள்ளி அருகில் வந்தபோது தறிகெட்டு ஓடிய டூவீலரில் இருந்து சதீஸ்குமார் தூக்கி வீசப்பட்டார். இதில், அவர் அருகில் உள்ள விவசாய கிணற்றுக்குள் விழுந்தார். சுமார் 100 அடி ஆழமுள்ள கிணற்றில் 10 அடி தண்ணீர் இருந்தது. இதனால், தண்ணீரில் தத்தளித்தவாறு சதீஸ்குமார் கூச்சலிட்டுள்ளார்.

சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்த போது, சதீஸ்குமார் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை கண்டு திடுக்கிட்டனர். உடனே, போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், தீயணைப்பு வீர்கள் விரைந்து சென்று, சுமார் ஒரு மணி நேரம் போராடி கயிறு கட்டி சதீஸ்குமாரை உயிருடன் மீட்டனர்.

Tags : crash worker ,Pochampalli ,
× RELATED போச்சம்பள்ளி அருகே பயங்கரம்...