×

கிடா விருந்துக்கு சென்று திரும்பியபோது சோகம் பைக் - கார் மோதியதில் வாலிபர்கள் 2 பேர் பலி

பாப்பிரெட்டிப்பட்டி, டிச.11: பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிடா விருந்துக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது, பைக் மீது கார் மோதியதில் நண்பர்கள் 2 பேர் பலியாகினர்.  சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே பூமரத்துப்பட்டியை சேர்ந்த முருகன் மகன் அஜீத் (25). இவருடைய நண்பர் ரகுபதி (23). கூலி தொழிலாளிகளான இருவருக்கும் இன்னும் திருமணமாகவில்லை. நேற்று முன்தினம் பொம்மிடி அருகே பி.பள்ளிப்பட்டியில் நடந்த கிடா விருந்தில் பங்கேற்க அஜீத்தும், ரகுபதியும் பைக்கில் சென்றனர். அங்கு விருந்தை முடித்துக் கொண்டு இரவில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
பள்ளிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, பொம்மிடியில் இருந்து பாப்பிரெட்டிப்பட்டி நோக்கி சென்ற கார் திடீரென பைக் மீது மோதியது. அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை அஜித் உயிரிழந்தார். மாலையில், நண்பரான ரகுபதியும் உயிரிழந்தார். பொம்மிடி போலீசார் விபத்து குறித்து விசாரிக்கின்றனர். நண்பர்கள் இருவர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Tags : children ,
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்